Pranab mukherjee teachers day



Pranab Mukherjee on Teachers' Day Thagavalthalam

Pranab mukherjee, teachers' day, technology, teaching methods,
New Delhi: Calling the teachers to imbibe technology in imparting education, President Pranab Mukherjee on Monday said they should instill in children civilisational values of sacrifice, tolerance, pluralism, understanding and compassion.
Greeting the teachers on the occasion of Teachers' Day, Mukherjee, who started his career as a teacher, said this is an occasion when "we recognise the dedicated services of the teachers of our nation".In a series of messages on Twitter, Mukherjee said a sound education system is the bedrock of an enlightened society."Inspired teachers are the building blocks of a good education system. An inspired teacher links the individual goals of the students to the societal and national goals," he said in the message.
He said teachers need to imbibe technology and new methodologies to create modern and effective approaches to teaching and learning and extended good wishes to entire teaching community for their dedication and commitment to the great cause of educating country's youth.Teachers' Day is celebrated on the birth anniversary of second president of the country Dr Sarvepalli Radhakrishnan, a revered educationist, philosopher and recipient of highest civilian honour of the country Bharat Ratna.A scholar of comparative religion and proponant of Advaita Vendanata who countered western criticism of Hinduism, Radhakrishnan held the King George fifth Chair of Mental and Moral Science at the University of Calcutta between 1921 and 1932 and was Spalding Professor of Eastern Religion and Ethics at University of Oxford between 1936 and 1952.
                                                                                                    P .Uma devi     

மத்திய அரசின் மாதிரிப் பள்ளி

Pasumai Nayagan பசுமை நாயகன்


         மத்திய அரசின் மாதிரிப் பள்ளித் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி அளித்தது முந்தைய திமுக அரசுதான் என முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கமளித்துள்ளார்.
             இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் மாதிரிப் பள்ளித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
       இந்த திட்டத்திற்கு அப்போது ஒப்புதல் அளித்துவிட்டு தற்போது கருணாநிதி எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இத்தகைய பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மட்டுமே கற்பிக்கப்படுவது கருணாநிதிக்கு தெரியாதா என அவர் வினவியுள்ளார்.
      மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் பொது-தனியார் பங்களிப்புடன் இந்தியாவில் முதல்கட்டமாக 41 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட உள்ளதாகவும் அதில் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
        500 ஒன்றியங்களில் இந்த பள்ளிகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்பந்தம் கோரியபோதிலும் தமிழ்நாட்டில் இருந்து இதுவரை யாரும் ஒப்பந்தம் கோரவில்லை என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். காவிரி, முல்லைப்பெரியாறு, என்.எல்.சி பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுத்ததுபோன்று, இந்த பிரச்னையிலும் தமிழர்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.

அரியர்களை எழுத அண்ணாபல்கலைக்கழகம் கடைசிவாய்ப்பு



Pasumai Nayagan
   பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாத தாள்களை (அரியர்) எழுத மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
கடந்த ஜூன் 2001 வரை பொறியியல் பட்டத்தில் இளநிலை மற்றும் முதுநிலை (பி.இ. பி.டெக், எம்.இ, எம்.டெக், பி.ஆர்க், பி.எஸ்.சி, எம்.எஸ்.சி, எம்பிஏ, எம்சிஏ ) முழு நேரம் மற்றும் பகுதி நேர படிப்புகளில் சேர்ந்தவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சிப்பெறாத தாள்களை எழுதி தேர்ச்சி பெறலாம்.
இவர்களுக்கான இறுதி வாய்ப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டபோதும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த சிறப்பு இறுதி வாய்ப்பை பல்கலைக்கழகம் அளித்துள்ளது.
இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்த விரும்புபவர்கள் மூன்று பாடங்கள் வரை ரூ. 3,000 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதன் பிறகு ஒவ்வொரு கூடுதல் பாடத்துக்கும் ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும்.
சிறப்பு தேர்வுகள் வரும், 2013 நவம்பர்/டிசம்பர் மாதங்கள் மற்றும் 2014 ஏப்ரல்/மே மாதங்களில் நடைபெறுகின்றன.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக தேர்வுகளுக்கான  கட்டுப்பாட்டாளரை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Students of anna university batch 2011 permitting them to complete arrear courses (Notification 2)


Students of anna university batch 2011 permitting them to complete arrear courses

தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

www.thagavalthalam.com

       தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தமிழக பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட சில கட்டணங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து அமைச்சர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற மாநில உயர்கல்வி மன்றக் கூட்டத்தில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், சில பல்கலைக்கழகங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

   இதைத் தொடர்ந்து பல்வேறு பல்கலைகழகங்களை சேர்ந்த மாணவர்கள் நேற்று சென்னை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மாநில உயர்கல்வி மன்ற கூட்டத்தில் கட்டண உயர்வு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

விழுப்புரம்,சென்னை,வேலூர்,நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு ஆசியர் கூட இல்லாமல் 16 அரசு பள்ளிகள்

School பள்ளிகள்
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.                                


   கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
கல்வியின் வீரியம், கல்வியின் சிறப்பு, கல்வியின் பெருமை என கல்வியின் மகத்துவத்தை உணர்ந்த நாம் அறிவுக் கவிஞன் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இந்த பொன்னான வரிகளில் தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது.
பொன், பொருள் அழியக் கூடும். ஆனால் கல்வி என்னும் செல்வம் காலத்தால் சாகாவரம் பெற்றவை என்பதற்கு மாற்று கருத்து கிடையாது. ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் கல்வியில் சாலச்சிறந்தவர் ஆக வேண்டும் என்பதே அனைவரின் கனவு,ஆசை, லட்சியமாக உள்ளது.
கல்வி  பலருக்கு உலகத்தை காட்டியுள்ளது. கல்வி பலரின் இருண்ட வாழ்கைக்கு கலங்கரை விளக்கமாய் உள்ளது. கல்வி எனும் சோலையில் கால் பதித்து தான் பெற்ற கல்வியால் தன் வாழ்க்கையில் வெற்றிக்கொடி கட்டி இவ்வுலகத்தால் அறியப்பெற்ற, போற்றப்பற்றவர்கள் எண்ணிக்கை அதிகமே...
ஒரு மனிதன் கல்வி கற்பதன் மூலம் தனி மனித முன்னேற்றத்திற்கு மட்டும் இன்றி அவன் வாழும் சமூகமும் அவன் பெற்ற கல்வியால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்னேற்றம் அடைகிறது என்பது நான் அனைவரும் அறிந்ததே...
சாகாவரம் பெற்ற முத்தான கல்வியை முத்து முத்தாக மாணவ, மாணவிகளுக்கு தெளிந்த நீரோடையாக வழங்குவது ஒரு அரசின், ஒவ்வொரு ஆசிரியரின் பொறுப்பு.
தமிழகத்தில் மட்டும் ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர் நிலை பள்ளி என மொத்தம் 53722-க்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் இருப்பதாக புள்ளிவிபரம் காட்டுகிறது.
பொதுவாக தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கும் தரமான கல்வியை புகுட்டுவது அரசின் கடமை. இன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளிகளில் கல்வி கடமையாக எடுத்து கற்பிக்கிறார்களா? அல்லது கடமைக்காக கற்ப்பிக்கப்படுகிறதா? என்ற கேள்வி நம் மனதில் தோன்றக் காரணம் ஆர்.எம்.எஸ்.ஏ என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்த அதிர்ச்சி  தகவல் தான்.
ஆம், “ஒரு ஆசிரியர் கூட இல்லாமல் தமிழகத்தில் 16 அரசு பள்ளிகள் செயல்படுவதாக” கணக்கெடுப்பில் கூறியுள்ளார்கள். இதன்படி விழுப்புரம்,சென்னை,வேலூர்,நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு ஆசியர் கூட இல்லாமல் 16 அரசு பள்ளிகள் இயங்கி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2,253 பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 195 பள்ளிகள் ஒரு ஆசிரியரை கொண்டு இயங்குகின்றன. அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 159 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 134 பள்ளிகளிலும், வேலூர் மாவட்டத்தில் 127 பள்ளிகளிலும் ஒரே ஒரு ஆசிரியர் இருக்கின்றனர்.
இது தவிர 16,421 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர். மாநிலம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையால் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உட்பட சுமார் 84 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக  ஆர்.எம்.எஸ்.ஏ என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பு நம் மனதில் வேதனையை அதிகரிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியரே இல்லாமல் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த களையூர் பகுதியில் இயங்கி வரும் ஆரம்பப் பள்ளியில் தான், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலர் தங்களது தொடக்கக் கல்வியைப் பெற்றுள்ளனர்.
 School பள்ளிகள்
கடந்த 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வ.உ.சி ஆரம்பப்பள்ளி, அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு அரிய பொக்கிஷமாக திகழ்ந்த இந்தப் பள்ளி தற்போது மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காரணம் 50 மாணவர்கள் வந்துப் போகும் இந்த பள்ளியில் தற்போது பணியாற்றுவது ஒரு தற்காலிக ஆசிரியர் மட்டுமே.
மாவட்ட கல்வி நிர்வாகத்தால் மூன்று மாதங்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் வேறு பள்ளியில் இருந்து வரவழைக்கப்பட்டு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி நிலையற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து வருவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.  முழுமையான கல்வி கிடைக்காத இந்தப் பள்ளி மாணவர்களுக்கு முறையான சத்துணவும் கிடைக்கவில்லை.
திறந்தவெளியே இவர்களுக்கான சமையற்கூடம், சுற்றுசுவரும் இல்லை,பள்ளிக்கு மேற்கூரையும் இல்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டின் முடிவிலும் தமிழகத்திலேயே விழுப்புரம் மாவட்டம் தான் கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்ற செய்தியே மீண்டும் வரும் என்பதில் சந்தேகமில்லை.
விரைவில் பள்ளியை அரசு தத்தெடுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், பள்ளிக்கு தரமான வசதிகளுடன் கூடிய கட்டடம் தேவை என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
- ப. தாமரைச் செல்வன்