1000-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மீது வழக்கு

   சென்னை சேலையூரில் பள்ளி பஸ்ஸின் ஓட்டை வழியாக விழுந்து 7 வயதுச் சிறுமி ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது
-இணைய செய்தியாளர் - செம்மொழி